Friday, 22 June 2012

சுமைத் தாங்கும் மலர்கள்

மென்மையின் பூரணங்கள்
வறுமைதுடைக்க...
கிழிந்திடும்
பட்டுத்தோரணங்கள்

கந்தகத்தீயில்
காசுக்காய் பொசுங்கும்
சந்தனப் பூக்கள்

தலைவாழைக்கு
நிழலாக.....
வெயிலில் கறையும்
பக்கவாழைகள்

வயிறுகழுவ
வட்டில்கழுவும்
தொட்டில் பூக்கள்

புத்தகம்தேடி
பூக்கும்வயதில்
சிப்பிகள்விற்று
சிதைந்திடும் முத்துக்கள்

சுகத்தில் முளைத்து
சுதந்திரம் தொலைத்த
தேசமிழந்த தேசியகீதங்கள்

முதலில்
குழந்தையும் தெய்வமும்
என்ற வார்த்தையை
மறுபரீசீலனை செய்யனும்.

1 comment: