தீக்கூட்டீல்......!
எப்படி
தேன்கூட்டுக்கு சம்மதித்தாய்
இடிதாங்கி நீ
கிளிவந்து உட்காந்தா
இடிந்து போவாய்
காட்டாற்று வெள்ளத்துக்கு
கைவளையின்
சிறையெடுப்பா?
காடுபுரட்டும் காற்று
கூட்டுக்குள் முடஙகாது
கைவீசி
மெய்பேசி
நெடுந்தூரம் நட.......!
உனக்கான உலகம் வேறு
வானத்தின் கீழ்
உனது வீடு
கோடுகளில்லாத தேசம்
உன்னுடையது
நீ
உச்சி சூரியன்
ஊர்மெச்ச ஒளிவீசு........!
No comments:
Post a Comment