Sunday, 24 June 2012

ஓரங்க நாயகன்....

ஓரங்க நாடக நாயகனாய்
அவன்.......

பூக்கள் எல்லாம்
இவனுக்காகவே மாலையானதோ
மலையாய் மலையாய் மாலைகள்

இவ்வளவு ரசிகர்களை
இவ்வளவு நாள் பார்த்ததில்லை
இவன்....

இவன் கர்வன்
எவர் சொல்லையும்
காதில் போட்டுக்கொள்ள
காது கொடான்.....

உள்ளுக்குள்
ஆயிரம் பூரிப்பு
எதிரிகளும் இவனைத் தேடி

முரண்பாடு
வாங்கியவன் சிரிக்கிறான்
கொடுத்தவன் அழுகிறான்
இனி
எவன்பாடு

நேற்று
இன்று
நாளையென்ற
சூழல்வலையில்
இவன் இல்லை

ஏனெனில்
இவன் இல்லை
பிணம்

No comments:

Post a Comment