Thursday, 21 June 2012

வேர்கள்.....!

ஓங்கி  வளர்ந்த.........!
நிழல் தூவும்   அடர்ந்த மேகங்களாய்
அழகு மரம்

எத்தனையோ கிளைகள்
எத்தனையோ இலைகள்
சோலை நிழலும்  சொக்கிப்போகும்
சுதந்திர நிழல்
சுந்தரமாய்  தரும்   சுதந்திர மரம்

எத்தனையோ
உயிர்கள்......எத்தனையோ  வலிகள்
எத்தனையோ  கனவுகள்
வேர்களாய்........

ஆமாம் ஆமாம்
வேர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை
நிழல்கள்
விழுங்கப்படுகிறதென்று......!

No comments:

Post a Comment