Saturday, 14 July 2012

அவள்....!


தேர்போல நடந்துவந்த பாவை---அவள்
   தீராத  ஆசைதரும் பூவை---என்னில்
தீயாகத்தான்  நுழைந்து
பனியாக குளிர்ந்துவிட்ட 
கோவை---என் ---தேவை

மெல்லத்தான்  கண்திறந்து  பார்த்தேன் அவள்
  மென்னழகை என்னுள்ளே வார்த்தேன் பூந்
தளிராக  சிரிக்கின்றப்
பூவுதட்டு புன்னகையில்
வேர்த்தேன் கவி---சேர்த்தேன்

பிறைநெற்றி  நிலவாகப் பொட்டு ---காதல்
 பித்தாக்கும்  காந்தவிழி மொட்டு---செம்
மாதுளையும்  மாங்கனியும்
 சேர்ந்தமைந்த  தேனிதழ்
தொட்டு ---மின்னல் வெட்டு

கவிகோடி  படைக்கின்ற அரங்கம் ---தமிழ்
  கற்பனையை  அள்ளுகின்ற சுரங்கம் அந்த
அழகுமயில் அருகிருக்க
பழகாமலா என்மனசு
 உறங்கும்---பொழுதும்---கிறங்கும்

No comments:

Post a Comment