Saturday, 14 July 2012

ஒரு கவிஞன்...!





சூரிய விதையை விதைப்பான் பூமி
சூழும் இருளை அறுப்பான்---அவன்
சீரிய வாழ்வினில் வறுமை நசுக்க
தினம்தினம் புழுவாய் தவிப்பான்


கூரிய தமிழ்சொல் எடுப்பான் தீயில்
ஊறிய கவியை கொடுப்பான் அவன்
பாடியப் பாட்டினில் பசியிரு க்காது
வாடிய வயிறாய் படுப்பான்

எரிபுயல் போலவே நடப்பான் -----உலகைப்
புரட்டிடும் கவியைப்  படைப்பான் ---அவன்
ஏளனப் புழுதியை என்றும் ஏற்று
எளிமையின் நிழலாய் கிடப்பான்

இவந்தான் பூமியின் வேந்தன் தமிழ்
கவியால் ஈர்க்கும் காந்தன் இவன்
வாழும் போது மதிப்புக ளில்லை
மண்ணில் பாவ மாந்தன்.....!



No comments:

Post a Comment