Wednesday, 4 July 2012

விவசாயம்

ஆலமர விழுதொடிச்சி
ஆரமர பல்லு தொளக்கி
ஆளுயர தொட்டியில்
மீனப்போல நான்குளிச்சி
தும்பபூவா துண்டெடுத்து
நோவாம நான் தொடச்சி
காலநேர கஞ்சிக்காக
சோலக்காட்டில் காத்திருக்கேன்

ஆழாக்கு அரிசியத்தான்
அவசரத்தில் கூழாக்கி
காரத்துக்கு ஊறுகாவ
பச்சைப்பயிரில் அறைச்செடுத்து
மேலாக்கப் போத்துக்கொள்ள
மாத்து துணி கிடையாது
நோகாம நான் துவைச்சி
கிழியாம காயவச்சேன்
கிழிஞ்சிபோன விவாசயத்த
தைக்கவேணும் பொறுங்கமச்சான்

No comments:

Post a Comment