Thursday, 8 May 2014

நெருப்பின் மகனே.....


நெருப்பின் மகனே....!
என் இளைய சொந்தமே

தீ வசிக்கும் கண்ணில்
என்ன???
நீர் வசிப்பு

கவலைத்தின்ற மிச்சமாய்
உன் கண்கள்
உன் அழகுமுகத்தில் ஏன்?
அச்சரேகைகள்

இலை விழுந்ததுக்கு
கிளை விழுந்ததாய்
எந்த மரமும் வேர் அறுப்பதில்லை

சின்னச்சின்ன தோல்விக்கும்
சிரம் கொடுப்பது
நாகரிக நடையாகிவிட்டது

தோல்வியென்பது
துவைக்கும்
கிழிக்காது

துவைப்பதுஎன்பது
சுத்தப்படுத்தவே

தோல்விக்கண்ணாடியில்
வெற்றியின்
முகம் பார்க்கலாம்

நீ உடையாமல் இருந்தால்
உடையாதிரு....


No comments:

Post a Comment